Friday, March 19, 2021

மனசாட்சி!

 Status 2021 (77)

மனசாட்சி உறங்கும் நேரங்களில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது!மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.  நம்மிடம் தார்மீக பயம் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். நம் மனம் பாகன் கட்டுப்பாட்டில் இருக்கும் யானையைப் போன்றது. யானைக்கு மதம் பிடித்து விட்டால் அதற்கு பாகனும் ஒன்று தான் பாமர மக்களும் ஒன்றுதான். மிதித்து த்வம்ஸம் செய்து விடும். அதுபோல் தான் நம்மிடம் மனசாட்சி உயிரோடு இல்லை என்றால் நாம் நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் மிருகத் தன்மை நம்மிடம் தஞ்சமடைந்து நல்ல எண்ணங்களே நம்மிடம் இல்லாத அளவிற்கு கொண்டு சென்று அடுத்தவர்களை கெடுத்தும் அழித்தும் அதுவே பெரும் சாதனை போல் எண்ணி மகிழும் நிலைதான் நமக்கு வந்து சேரும். எனவே நாம் நம் மனசாட்சிக்கு பயந்து நல்லவற்றையே எண்ணி நல்லவற்றையே செய்து நலம் பெற வாழ்வோமே!

Victory King (VK)

No comments: