Wednesday, March 24, 2021

பண்புடன் பக்குவப்படுத்திக்கொள்வோமே!

 Status 2021 (82)

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?

தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?

கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?

கண்ணதாசன்

நாம் இறந்த பிறகு நம்மோடு வருவது வீடு வறரயில்தான் உறவுகள், வீதி வரையில்தான் மனைவியும் மக்களும், காடு வரையில்தான் பிள்ளை. அதன் பிறகு நம்மோடு வருவது ஒன்றும் இல்லை. நம் நிலை பூமிக்கு அடியிலோ அல்லது எரித்த சாம்பல் ஒரு பிடியிலோ. இதனை அனைவரும் நன்கு உணர்ந்தாலும் சிலர் உயிரோடு இருக்கும் பொழுது தான் என்ற இறுமாப்பில் அடாது செய்தும் மற்றவர்களை பாடாய்படுத்தியும் அனைவரது சாபங்களையும் பெற்று இறந்த பிறகும் அனைவராலும் தூற்றப்பட்டு கேவலப் படுகிறார்கள். எனவே இதனை நாம் மனதில் ஏற்றி வாழும் பொழுதே பண்போடு வாழ்ந்து நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்வோமே!

Victory King (VK)

No comments: