Friday, June 5, 2020

எதிர்பார்ப்புகள்

Status 242 

எதிர்பார்ப்புகள் சில சமயங்களில் ஏமாற்றங்களை தரும். கடமையைச் செய்து பலனை எதிர்பாராமல் இருப்பதே அனேக அற்புதங்களுக்கு
வழிவகுத்துவிடும்.

பகவத் கீதை

எதிர்பார்ப்புகள் மூன்று வகைப்படும்

1. மற்றவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது. இதனால் நமக்கு மனவுளைச்சல் மட்டுமே வந்தடையும்.

2.நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று ஒரு ஏக்க எதிர்பார்ப்பு. இதில் நாம் எண்ணியது நடந்துவிட்டால் மகிழ்ச்சி இல்லையேல் வேதனைதான்

3. நாம் மற்றவர்களிடம் எதையாவது எதிர்பார்த்து உதவி செய்தல். இது ஒருமுரண்பாடான செயல். எதிர்பார்த்தது நடக்குமா நடக்காதா என்ற மன உளைச்சலிலேயே நம் உடல் நலம் கெடும்.
எனவே நம் செயலும் சிந்தனையும் எதிர்பார்ப்பின்றி இருக்கும் பொழுதுதான் நமக்கு மகிழ்ச்சி என்பது நிலைக்கும்.

Victory king (VK)

No comments: