Monday, June 29, 2020

எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு!

Status 266

தீர்க்க முடியாத துன்பம் என்ற ஒன்று வாழ்வில் கிடையவே கிடையாது. தீர்க்கும் வழிவகைகளை அறியாமல் தான் நாம் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறோம். திறக்க முடியாத பூட்டு எதுவுமில்லை. அதற்கான சரியான சாவியைத் தேடிப்பிடித்தால் போதும்.

வேதாத்திரி மகரிஷி

நம்மால் தாங்க முடியாத  இழப்பு, உண்மைகளை மறைக்க வேண்டிய சூழ்நிலை,  நம் சந்தோஷங்களை வெளியில் காட்டிக் கொள்ள முடியாத சந்தர்ப்பம், இவைகளினால்தான் நம் மனதில் தாங்க முடியாத துன்பம் தொற்றிக்கொள்கிறது அந்த சமயத்தில்தான் நாம் மனோதிடத்துடன் அமைதியுடனும் இருந்து இதனை எதிர்கொள்ளும் உபாயத்தை கண்டறிந்து துன்பத்திலிருந்து தெளிவடைய முயற்சிக்க வேண்டும்.
அனைத்திற்கும் நமக்கு உபாயம் கிடைக்க அபயம் அளிப்பது நம் மனமே.

Victory king (VK)

No comments: