Thursday, June 25, 2020

முயற்சி!

Status 262

எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.

சுவாமி விவேகானந்தர்

எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற ஏக்கத்தை மட்டும் மனதில் கொண்டு சோகத்தை முகத்திற்கு சொந்தமாக்கி செயலற்று அமர்ந்திருப்பவர்களின் நிலை தம் வாழ்க்கையை தாமே சூனியமாக்கி கொள்வது போல்தான்.
எனவே கடந்தகால அனுபவத்தை மனதிற்கொண்டு சீரிய சிந்தனையுடன் எதிர்காலத்தைத் தீர்மானித்து நிகழ்காலத்தில் திறம்பட செயல்பட்டால் எதிர்காலம் இன்ப மயமாகும் என்பதில் சந்தேகமே இல்லை. எதிர்கால வாழ்க்கையை ஆக்கபூர்வமாக சிந்தித்து செயல்பட்டு எப்பொழுதுமே ஆனந்தமாக வாழ முயற்சிப்போமே.

Victory king (VK)

No comments: