Monday, June 22, 2020

தர்மங்கள்!

Status 259

உயிரோடு இருக்கையில் எதையும் கொடாமல் இறந்த பிறகு தர்மங்கள் செய்ய ஏற்பாடு செய்வது சுயநலமாகும்.

இந்து தர்ம சாஸ்திரம்

நாம் நம் பெற்றோர்களை அவர்கள் உயிரோடு இருக்கும்போது அன்போடும் பாசத்தோடும் அரவணைத்து இறுதி காலம் வரை விரும்பியவற்றை விரும்பும்போது மனம் கோணாமல் பேணி காப்பதை விடுத்து அவர்கள் இறந்த பிறகு அவருக்காக என்று தான தர்மங்கள் செய்வதும், அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை சமைத்து அவர்கள் நினைவு நாளன்று சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடத்துவதும் நம் பெருமையை பறைசாற்றிக் கொள்வது போல்தான். இவைகள் அனைத்தையும் அவர்கள் உயிரோடு இருக்கும்போது செய்திருந்தால் இறந்த பிறகு செய்யும் இச்செயல்கள் இயல்பாகும். நமக்கும் ஓர் ஆத்ம திருப்தி கிடைக்கும்.

Victory king (VK)

No comments: