Sunday, June 28, 2020

அச்சமே துயரம், துயரமே அச்சம்!

Status 265

அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது. அச்சமே கேட்டை விளைவிப்பது.
அச்சமே மரணத்தைத் தருவது. நமது உண்மை இயல்பை நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பதனால்தான் நமக்கு அச்சம் ஏற்படுகின்றது.

விவேகானந்தர்

அச்சம் என்பது நம் மனதைப் பொருத்தது. தன்னம்பிக்கை இல்லாதபோதுதான் நம்மிடம் அச்சம் குடிகொள்கிறது.இது நாம் குழந்தை பருவத்தில் இருந்தே வளர்க்கப்பட்ட விதத்திலும் இருக்கலாம் அல்லது நம் வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்ஒரு நிகழ்வில் பயந்து அது நம் மனதை விட்டு அகலாத நிலையினாலும் இருக்கலாம். எனவே முயற்சி செய்து மனதை திடமாக்க பயிற்சி செய்து அச்சத்தில் இருந்து வெளிவந்து நாம் நம் இயல்பு நிலைக்கு வருவோமேயானால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

Victory king (VK)

No comments: