Sunday, February 7, 2021

மானிடப் பிறவிக்குக் கிடைத்த பொக்கிஷம்!

 Status 2021 (38)

நாம் பிறக்கும் பொழுது நம்மை யார் யார் வந்து பார்த்தார்கள், எதைக் கண்டு ரசிக்கிறோம், எதனைக் கேட்கிறோம் என்ற புரியாத நிலையில் நமக்குத் தெரிந்தவரை வாய்மொழி அழுகையும் சிரிப்பும்தான். உயிர் நம் உடலை விட்டு பிரிந்த பிறகு நாம் ஒரு ஜடப்பொருள் ஆகிவிடுகிறோம். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலம்தான் நமக்கு கிடைத்த புரிதல் நிலை. மானிடப் பிறவிக்கு  கிடைத்த ஒரு மகத்தான காலகட்டம். எனவே நமக்கு கிடைத்த அந்த சந்தர்ப்பத்தை வீணடிக்காமல் அன்போடும் பண்போடும் அனைவரையும் அரவணைத்து வாழ்ந்து மகிழ்ந்து அந்த காலகட்டத்தை பொக்கிஷமாக்கி நம் சந்ததியினருக்கு அன்பளிப்பாக விட்டுச் செல்வோமே!

Victory King (VK)

No comments: