Saturday, February 6, 2021

மனசாட்சி!

 Status 2021 (37)

மரண பயம் என்பது இறக்கும் தருவாயில் தங்கள் ஏக்கங்களை  வெளியில் கூற முடியாத ஒரு நிலையில் அனைவருக்குமே வரக்கூடிய ஒன்று. ஆனால் தவறு செய்பவர்கள் அடுத்தவர்களுக்கு தீங்கு செய்பவர்கள் துரோகம் செய்பவர்கள் இவர்களுக்கான தண்டனை தினம் தினம் அவர்கள் செத்து பிழைக்கும் நிலைதான். எல்லா குற்றங்களையும் செய்துவிட்டு நிம்மதியாக ஒருவராலும் இருக்க முடியாது. வெளியில் வேண்டுமானால் வேஷம் போடலாம். மனசாட்சி அவர்களை மன்னிக்கவே மன்னிக்காது. அந்த மன உறுத்தல் ஒரு நிலையில் அடக்க முடியாமல் பைத்தியம் பிடித்து நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலைதான் வரும். எனவே யாருக்கும் தெரியாமல் நாம் செய்த தவறை மறைத்துவிடலாம் என்று எண்ணி மகிழாமல் மனசாட்சியுடன் எண்ணம் செயல் அனைத்திலும் நேர்மை கடைபிடித்து மகிழ்வுடன் வாழ்வோம்!

Victory King (VK)

No comments: