Friday, February 5, 2021

பிறரை நோகடிக்க வேண்டாமே!

 Status 2021 (36)

ஒரு சிலர் தமக்கு எவ்வளவு வசதி இருந்தாலும் அடுத்தவரை நோகடித்து அவர்கள் சொத்தை பறிப்பதிலும் அதனை நியாயப்படுத்தி பேசி அவர்கள் நிம்மதியைக் கெடுப்பதிலும் தங்கள் சுயநலத்தை வெளிப்படையாகவே காண்பிப்பார்கள். இது இவர்களுடைய பேராசையின் வெளிப்பாடே. பேராசையின் பலன் இப்பொழுது வேண்டுமானால் சாதகமாக இருக்கலாம். ஆனால் அதன் விளைவு ஒருகட்டத்தில் நம்மையே தாக்கும் என்று உணர வேண்டும். அடுத்தவர்கள் புண்பட்ட மனதிலிருந்து வரும் வேதனை சும்மா விடாது. எனவே அடுத்தவர்களுக்கு உதவ முடியவில்லை என்றாலும் அவர்களுக்கு தீது நினைக்காமல் இருந்தாலே நம் வாழ்க்கை நலமாக இருக்கும்.  குடும்பம் வளமாக இருக்கும்.

Victory King (VK)

No comments: