Friday, February 19, 2021

தானமும் தர்மமும்!

 Status 2021 (50)

நாம் பொதுவாக தான தர்மம் செய்தால் புண்ணியம் என்று சொன்னாலும் நாம் செய்யும் தர்மத்திற்குத்தான் பலன் புண்ணியமாக வந்து சேரும். பிறர் கேட்டு நாம் கொடுப்பதுதான் தானம். அது நாம் பிறந்த மனித பிறவிக்கு ஒரு கடமை என்றே சொல்லலாம். பிறர் கேட்காமலேயே அவர்கள் நிலையறிந்து தக்க சமயத்தில் உதவி செய்வதுதான் தர்மம். கர்ணன் தர்மத்தையே வாழ்நாள் முழுவதும்செய்த புண்ணியத்தால் போர்க்களத்தில் அவர் உயிர் அவரை விட்டுப் பிரியவில்லை. அவர் செய்த புண்ணியத்தை எல்லாம் கிருஷ்ணன் கேட்க அதை தாரைவார்த்துக் கொடுத்தவுடன்தான் அவர் உயிர் பிரிகிறது. தர்மத்திற்கு அப்படி ஒரு மகிமை. எனவே  ‘நானும் என்னிடம் உதவி கேட்டவர்களுக்கு எல்லாம் நிறைய செய்திருக்கிறேன்’ என்று பெருமைப் பட்டுக் கொள்ளாமல் தர்மம் செய்து புண்ணியத்தை பெற்று வாழ்க்கையில் சிறப்போம்!

Victory King (VK)

No comments: