Monday, February 22, 2021

அத்து மீறாத ஆசை!

 Status 2021 (52)

நம் மனதில் ஆசையை வளர்த்துக் கொள்வது தவறில்லை. ஆனால் அந்த ஆசை நம் தகுதிக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும். தகுதிக்கு மீறி ஆசை பேராசையாக மாறிவிட்டால் நம் மனதில் ஒரு போராட்டம் தான். விளைவு நம் நிலையை தடுமாற செய்து மன உளைச்சலை ஏற்படுத்தி துன்பத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிடும். நாம் விதைத்ததை தான் அறுவடை செய்ய முடியும். எனவே நம் மனதில் பேராசையை வளர்த்தால் அதன் பலன் துன்பம். மனதில் அன்பை வளர்த்தால் நாம் பண்போடு வாழ வழிவகுக்கும். நன்கு உணர்ந்து பேராசையை நாம் நம் மனதில் வளர்த்துக் கொள்ளாமல் அன்போடும் பண்போடும் மகிழ்வோடும் வாழ்வோமே!

Victory King (VK)

No comments: