Sunday, August 8, 2021

பெற்றோரைப் போற்றுவோம்!

 Status 2021 (213)

 நமக்கு உயிர் கொடுத்து இந்த உலகுக்கு அறிமுகப்படுத்திய பெற்றோருக்கு உரிய அந்தஸ்தையும் மதிப்பையும் அவர்கள் உயிருடன் இருக்கும்போதே கொடுக்காமல் இறந்த பிறகு அவர்கள் புகைப்படத்தை மாட்டி மாலை போட்டு அவர்களுக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்து காரியங்கள் செய்து தங்கள் பெருமையை வெளிப்படுத்துவதால் எந்தவித பிரயோஜனமும் இல்லை. எல்லா பாவங்களுக்கும் பரிகாரம் உண்டு. பெற்ற தாய் தந்தையை கைவிட்டவன் எத்தனை தான தர்மங்கள் செய்தாலும், பிரார்த்தனை செய்தாலும் அதற்குப் பரிகாரம் என்பதே கிடையாது. அந்த பாவத்துக்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். நம் தாய் தந்தையரின் அருமை நமக்கு நாம் வளரும்போது தெரியாது. நாம் நம் பிள்ளைகளை வளர்க்கும்போதுதான் அதனை உணர முடியும். இதனை மனதில் கொண்டு நாம் பெற்றோரை எந்த சமயத்திலும் சுமையாகக் கருதாமல் மனமுவந்து உரிய அந்தஸ்த்தைக் கொடுத்து அவர்களின் ஆசியைப் பெற்று நாமும் நம் சந்ததியினரும் நலமுடனும் மகிழ்வுடனும் வாழ்ந்து காட்டுவோமே!

Victory King (VK)

No comments: