Friday, August 20, 2021

தன்வினை!

Status 2021 (225)

தவறு செய்பவர்கள் தங்களுக்கு பின்பலமாக ஒரு கிரிமினலை வைத்துக்கொண்டுதான் எல்லா அராஜகங்களையும் செய்வார்கள். ஆனால் ஒன்று பாம்பாட்டிக்கு பாம்பால் தான் சாவு என்று சொல்லுவதை போல எந்த கிரிமினல் தவறு செய்வதற்கு உடந்தையாக இருந்தார்களோ அவர்களாலேயே தான் அராஜகம் செய்பவர்களுக்கும் அழிவு. அராஜகம் செய்பவர்களின் சந்தோஷம் தற்காலிகமானதே. அடுத்தவரைக் கெடுத்து ஆனந்தப்படுபவர்களின் நிலை அவர்கள் வாழ்க்கையில் எழுந்திருக்க முடியாத வீழ்ச்சி வரும்பொழுதுதான் தெரியும். எனவே நமக்கு ஆள் இருக்கிறது என்று அராஜகத்தில் ஈடுபடாமல் அனைவரையும் அனுசரித்து அரவணைத்து வாழ்ந்தால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிதான்!

Victory King  (VK)

No comments: