Tuesday, August 17, 2021

பிராயச்சித்தம்!

 Status 2021 (222)

நாம் பாவம் செய்வதைவிட செய்த பாவத்துக்கு பிராயச்சித்தம் கூட தேடாமல் புண்ணியம் கிடைத்தால் போதும் என்று இறைவனிடம் பிராத்திப்பதால் எந்தவித பிரயோனமும் இல்லை. யாருக்கும் பயப்படாவிட்டாலும் இறைவனுக்கு மட்டுமாவது பயந்து பாவம் செய்யாமல் இருந்தால் நமக்கு அருள் கிடைப்பது நிச்சயம். தெரியாமல் செய்த பாவத்தைவிட தெரிந்து செய்த பாவங்கள் மேலும் மேலும் நம்மைத் துன்புறுத்திக்கொண்டேதான் இருக்கும். ‘யாருக்குத் தெரியப் போகிறது என்று செய்யும் அனைத்துப் பாவங்களுக்கும் சாட்சியாக சூரியனும் சந்திரனும் இருக்கிறார்கள்’ என்கிறது மனுதர்ம சாஸ்த்திரம். இதனை நம்புபவர்கள் திருந்தட்டும். நம்பிக்கை இல்லாதவர்கள் பட்டு அனுபவித்த பிறகாவது உணர்ந்தால் நல்வழி கிடைக்கும். 

Victory King (VK)

No comments: