Tuesday, August 3, 2021

பிறப்பின் பயன்!

 Status 2021 (208)

எதுவும் இல்லாமல்தான் பிறந்தோம்.  பிறகு எல்லாம் வேண்டுமென்று அலைந்தோம். ஒரு நிலையில் எதுவும் நிரந்தமில்லை என்பதையும் அறிந்தோம். உற்று நோக்கும்போது உயிரும் சொந்தமில்லை என உணர்ந்தோம். மேலும், ஒரு நாள் உலகை விட்டு சொல்லாமல் சென்று விடுவோம் என்பதுதான் வாழ்க்கை என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்தோம். இவை அனைத்தும் நன்கு அறிந்த நாம், இருக்கும் வரை நல்லவற்றையே எண்ணி நன்மையே செய்து முடிந்தவரை பிறர் மனம் புண்படாமல் வாழ்க்கையை நடத்தி நம் வாழ்நாளை கடத்தாவிட்டால் நாம் மனிதப் பிறவியாகப் பிறந்தும் பலன் இல்லை. எனவே நாம்  நற்பண்புகளோடு  வாழ்ந்து வாழ்க்கையை மகிழ்வோடு கடத்துவோம்!  

Victory King (VK)

No comments: