Wednesday, December 28, 2022

#Victory King: சீரான வாழ்க்கைக்கு அருமருந்து!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1169

அளவுக்கு மீறியஅன்பு, ஆசை, பற்று, பாசம் இவைகளும் நமக்கு ஆபத்தை தான் விளைவிக்கும். நாம் எந்த அளவிற்கு சந்தோஷத்தில் திளைக்கிறோமோ, அந்த அளவிற்கு  அவை நம்மை விட்டு சிறிது சிறிதாக விலகும் பொழுது, அதன் தாக்கம் நம்மால் தாங்க முடியாத அளவிற்கு கொண்டு விட்டு விடும்.எனவே "அளவிற்கு மீறினால் அமிர்தமும் விஷம்" என்ற பழமொழியை மனதில் கொண்டு எதையும் அளவோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தோடு வாழ்ந்தால் நமது வாழ்க்கை சீராக அமையும் என்பதை உணர்வோமே!

Victory king alias V. Krishnamurthy

No comments: