Thursday, September 16, 2021

‘அடக்கம் அமரருள் உய்க்கும்'

Status 2021 (250)

ஒருவர் அமைதியாக இருக்கிறார் என்றால் அவர் அடிமை என்று அர்த்தமில்லை. அமைதியான குணம் என்பது ஒரு பண்பு. அமைதி மனத்தூய்மையைக் கொடுக்கும். மன அமைதி இருந்தால்தான் நம் செயல்களில் தெளிவு இருக்கும். அமைதிக்கு அடையாளம் அடக்கம். மனதில் தெளிவு இல்லை என்றால் அது தரிகெட்டு அவிழ்த்துவிட்டக் காளை போல் அலைபாய்ந்து தாறுமாறாய் சிந்திக்கத் தூண்டி மற்றவர்களை பதம் பார்க்க முற்படும். எனவே, அமைதியாக இருந்து அடக்கத்தைக் கடைபிடித்து மற்றவர்களை சீண்டாமலும் நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொண்டும் வாழ முயல்வோமே!  ‘அடக்கம் அமரருள் உய்க்கும்' என்ற வள்ளுவர் வாக்கைப் போற்றுவோமே! 

Victory King (VK) 


No comments: