Sunday, September 12, 2021

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

Status 2021 (246)

நம் பிள்ளைகளிடம் நமக்கு பாசம், பரிவு அதிகமாக இருக்கலாம். அவர்கள் விரும்பிய அனைத்தையும் வாங்கிக்கொடுத்து மகிழ்விக்கலாம். ஆனால், கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்து பண்போடு வாழக் கற்றுக் கொடுத்து வளர்க்காமல் தன் பிள்ளை தனக்கு வேண்டியதை தானே தேர்ந்தெடுக்கும் திறமை அவர்களுக்குண்டு என அவர்கள் மீது பாசத்தைக் கொட்டி அவர்கள் வாழ்க்கையை கெடுக்காமல் தக்க சமயத்தில் தகுந்த அறிவுரைகளைக் கற்றுக்கொடுத்து வளர்த்தால் பிள்ளைகளின் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது சந்தேகமே இல்லை. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? எனவே, அவர்களுக்கான பொறுப்புணர்வுக்கு அவர்களின் சிறுவயது முதலே நாம்தான்  முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இல்லையேல் தும்பை விட்டு வாலைப் பிடித்த விஷயமாகத்தான் இருக்கும். சிந்திப்போமே!

Victory King (VK)

No comments: