Wednesday, September 15, 2021

நன்றி மறப்பது நன்றன்று!

Status 2021 (249)

தேவையானவர்களுக்கு தேவைப்படும்போது தக்க சமயத்தில் உதவி செய்வதே நற்பண்பு. பணமும் பொருளும் கொடுத்து உதவுவது மட்டுமல்ல, மனம் தளர்ந்திருக்கும்போது நேர்மறையாக சொல்லப்படும் ஆறுதல் வார்த்தைகளும் உதவிதான்.  உதவி என்பது செயல் மட்டுமல்ல, உதவுபவருக்கும் உதவி செய்பவருக்கும் ஒருசேர மகிழ்ச்சியைக் கொடுக்கும் மனம் ஒத்த உணர்வு. நமக்கு உதவி செய்பவருக்கு எக்காலத்தும் நாம் மனதாலும் தீங்கு நினைக்காமலும் நன்றியை மறக்காமலும் இருந்தாலே அவர்களுக்கு நாம் செய்யும் பேருதவியாகும். ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்ற வள்ளுவரின் வாக்கை மனதில் கொள்வோமே! 

Victory King (VK) 


No comments: