Thursday, May 23, 2013

உங்களுடன் சில வரிகள்!

அன்று மாயவரம் என்று அழைக்கப்பட்ட மயிலாடுதுறை
கணித மேதை ராமானுஜம்  படித்து, வளர்ந்த  ஊரான கும்பகோணத்துக்கு அருகாமையில் இருந்ததாலோ என்னவோ,  எனக்கு கணிதத்தின் மீது தனி அவா.

நான் கும்பகோணத்தில் சில வருடங்கள் பணி ஆற்றும் வாய்ப்பு கிடைத்தது. எனது  இரு பெண் குழந்தைகளும் அங்குதான் பிறந்தார்கள். இவை எனக்குக் கிடைத்த பெருமை என்று நான் நினைக்கிறேன்.

மனக்கணக்கு, பொதுக்கணிதம் இவற்றின் மீது எனக்கு தனி நாட்டம். அதுவே இந்த ப்ளாகை  துவங்குவதற்கான தூண்டுகோல். எனக்குத் தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். இதுவே என் நோக்கம்.

- வீக்கே-