Monday, July 5, 2021

நன்றியும், நன்றிக் கடனும்!

  Status 2021 (180)

நமக்கு ஒருவர் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்ததை நம் வாழ்நாள் முழுவதும் மறக்கக் கூடாத ஒரு விஷயம். நமக்குப் பண பலம் வரலாம், அந்தஸ்து வரலாம். ஆனால் அந்த நன்றிக் கடனை மட்டும் நாம் மறந்தால் நாம் ஒரு பண்பில்லாத மனிதராகி விடுவோம். நாம் பெற்ற உதவியானது ஒரு வட்டியில்லா கடன். பாசத்தின் பலன். பண்பின் இலக்கணம். எனவே, எத்தருணத்திலாவது எந்த வகையிலாவது நாம் அந்த நன்றிக் கடனை திருப்பி செலுத்தினால்தான் நாம் மனநிம்மதியை பெற முடியும். நன்றியை மறந்தால் உதவி செய்தவர் வேண்டுமானால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருக்கலாம். நாம் நம் மன உறுத்தலில் இருந்து விடுபட முடியாது. எனவே, நாம் நன்றியை மட்டும் கடனில் வைக்கக் கூடாது. இந்த உண்மையை உணர்ந்தால் நாம் பண்போடு வாழலாம்.

Victory King (VK)

No comments: