Monday, July 12, 2021

வாழ்க்கையின் நீதி!

 Status 2021 (187)

நாம் ஒருவரிடம் சத்தியம் செய்து ஒரு காரியத்தை செய்கிறேன் என்று ஒத்துக்கொண்டால் சமயத்தில் சங்கடத்தில் மாட்டிவிடுவோம். அதை சாதாரணமாக செய்கிறேன் என்று சொல்லி அதை செய்து முடித்தாலும் சந்தர்பவசத்தால் செய்ய முடியாவிட்டாலும் சமாளித்துக்கொள்ளலாம். எனவே எதற்கும் சத்தியம் செய்து சங்கடத்தில் மாட்டிக்கொள்ள வேண்டாம். அதுபோல வஞ்சனையையே நம் மனதில்கொண்டு வாழ்ந்தால் நம் வாழ்வு அனைத்தும் வீணாகும் பாரதத்தில் சகுனிபோல. அதுபோல், மனதில் குரோதம் கொண்டாலும் நமக்கு விரோதம்தான் மிஞ்சும் வாழ்வில், பாரதத்தில் திருதராஷ்டிரனாய் போல. எனவே பெற்றோர்கள் செய்யும் பாவங்கள் அனைத்தும் பிள்ளைகளைத்தான் பாதிக்கும் என்பதையும் நன்கு உணர்ந்து அதற்கு ஏற்ப நாம் வாழ்வில் பயணித்து நல்லதோர் மனிதனாய் நலமுடன் வாழ்வோமே!

Victory King (VK)

No comments: