Tuesday, January 19, 2021

வாழத்தானே பிறந்தோம், வாழ்ந்துத்தான் பார்த்து விடுவோமே!

 Status 2021 (19)

நாம் வாழத்தான் பிறந்தோம். வாழ்க்கையில் பல இன்னல்கள் இடர்பாடுகள் வரத்தான் செய்யும். அப்பொழுது கவலைப்படுவதில் எந்தவித பிரயோஜனமும் இல்லை.ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் -கவலையால் எதையும் தடுத்துவிட முடியாது.  எதையும் மாற்றிவிட முடியாது. கவலை எதற்கும் மாற்றாகிவிடாது. அமைதியாக சிந்தித்து அதிலிருந்து விடுபட முயன்றால் ஏதாவது ஒருவிதத்தில் ஒரு நல்ல முடிவு கிடைக்கும். ஒரு பழமொழி உண்டு, "நம் தலைக்கு மேலே பறக்கும் பறவையை நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அது நம் தலையில் கூடு கட்டாமல் நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும்". அதுபோல கவலைகள் வரும் பொழுது அமைதியாக சிந்தித்து அதற்கான விடையைக் காண வேண்டும். கவலையில் இருந்து நாம் விடுபட இதை முயற்சிப்போமே!

Victory King (VK)

No comments: