Monday, January 18, 2021

தர்மம் தலை காக்கும்!

Status 2021 (18)

தர்மம் தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும், கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிக்கும்,  மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கி விடும், நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்.நல்லவர் என்றும் கெடுவதில்லை. இது நான்குமறை தீர்ப்பு. கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள்

இந்தப் பாடல் வரிகள் ஒவ்வொன்றும்  புராணங்களில் நிரூபணமான ஒன்று.

தர்மமும் உண்மையும் ஒன்றுக்கொன்று இணை பிரியாது. உள்ளத்தில் உண்மை இருந்தால் தான் தர்ம சிந்தனையே வரும். உள்ளம் ஆணையிட்டால்தான் உடல் உறுப்புக்கள் அதற்கு செயல் வடிவம் கொடுக்கும்.எனவே இதனை நாம் மனதில் பதியவைத்து உள்ளத்திலே உண்மைக்கு மட்டும் இருப்பிடம் தந்து பொய்யான பாவ காரியங்களை உள்ளே அனுமதிக்காமல் வாழ்ந்து நம்மையும் நம் தலைமுறையையும் காப்போம்!

Victory King (VK)

No comments: