Sunday, June 19, 2022

#Victory King: எண்ணமே நம் சொத்து!

விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1101

ஆழ்ந்த துக்கத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுது விட்டால் துக்கத்தின் சுமை குறையும். கோபத்தின் உச்சத்தில் மௌனியாகி நிதானத்தை கடைபிடித்தால் நாவிலிருந்து கடும் சொற்களை தவிர்க்கலாம். மட்டற்ற மகிழ்ச்சியில்சாந்தமுடன்இயல்பாக செயல்பட்டால் மமதை தலைக்கு ஏறாமல் காப்பாற்றிக் கொள்ளலாம். உற்றார் உறவினர் நண்பர்களுடன் கலந்துரையாடினால் சோகத்தை தவிர்க்கலாம். அடுத்தவர்களின் சொத்தை அபகரிக்கும் எண்ணத்தை நம் மனதிலிருந்து நீக்கினால் நம் சொத்தை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம். முயற்சிப்போமே!

Victory King (VK) Alias V. Krishnamurthy

No comments: