Saturday, May 21, 2022

#Victory King: சோகமும், சுகமும் நம் கைகளில்தான்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி: 1085

நாம் எண்ணியது நடந்தால் மகிழ்வதும் அதுவே எதிர்மறையாக நடந்துவிட்டால் மனம் வேதனைப்பட்டு விரக்தி ஆவதும் மனித இயல்புதான். இந்த எதிர்மறை நிகழ்வின் விரக்தியிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் ஒன்று நாம் எதையும் அளவுக்கு மீறி எதிர்பார்த்து கனவு காணாமல் இருக்கலாம் அல்லது எதிர்மறை நிகழ்வுகள் நடந்து விட்டால் அதை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ளலாம். இதை விடுத்து நடந்ததையே நினைத்து வருந்திக் கொண்டிருந்தால் சுகம் என்பதே வாழ்வில் இல்லாமல் சோகம்தான் மிஞ்சும். எனவே வாழும் காலத்தை வசந்தமாக்கி வாழப் பழகுவோமே!

Victory King (VK)

No comments: