Saturday, June 12, 2021

பாசத்தினால் பிள்ளை கெடும்!

 Status 2021 (157)

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் காட்டும் பாசம்ஓர் விலை மதிப்பில்லாத பொக்கிஷம். அதுதான் ரத்தபாசம். அந்தப் பாசத்தினால் குடும்பத்தில் வசந்தம் ஏற்படவேண்டும். அதை விடுத்து பாசம் என்ற பெயரில் அவர்களை கட்டுப்பாடில்லாமல் வளர்த்து அவர்கள் வாழ்க்கையை சீரழித்து விடக் கூடாது. பாசம் என்ற குதிரையை கடிவாளம் போட்டு அதன் மறுமுனை பெற்றோரின் கையில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் பெற்றோரின் பாசத்தை பிள்ளைகள் ஒரு வலுவான சக்தியாக வைத்துக்கொண்டு தாறுமாறாக தங்கள் மனதை ஓட விடும் பொழுது பெற்றோர் கட்டுப்பாடு என்ற கடிவாளத்தை இழுத்து பிடித்து அவர்களை நேர்வழியில் செல்ல வழிவகுத்து வாழ்க்கையை வளமாக்கும்.-

Victory King (VK)

No comments: