Friday, April 2, 2021

தர்மத்தின் நீதி!

 Status 2021 (92) 

நம் சுயநலத்திற்காக தீயவைகளை எண்ணி மற்றவர்களுக்கு தீமைகளை செய்து அடுத்தவர்களை அழித்து துரோகச் செயல்களையே தன் பண்பாக கொண்டு இப்படிப்பட்ட அனைத்து பாவங்களுக்கும் சொந்தக்காரனாக இருந்துகொண்டு தர்மம் என்ற பெயரில் கடவுளிடம் பேரம் பேசி காணிக்கை செலுத்தி விட்டு தன்னை எந்த வித பாவமும் ஒன்றும் செய்யாது தர்மம் என்னை காத்து விடும் என்று பெருமையாக மார்தட்டிக் கொள்ளும் பாவிகளின் கற்ற கல்வி தேடிய செல்வம் தன் குடும்ப கவுரவம் தன்னுடைய சந்ததியினர் உற்றார் உறவினர்கள் பற்று அனைத்தையும் இழந்து நடுரோட்டில் நிற்க வைத்து விடும். பாவங்களைச் செய்யும் பாவிகளுக்கு இதுபோன்ற தர்மம் துணை போகாது. எனவே நேர் சிந்தனையோடு நேர்மையோடு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாம் செய்யும் தர்மம் நிச்சயம் நம்மை காப்பாற்றும். உணர்ந்து செயல்படுவோம் உள்ளத்தை தூய்மையாக வைத்துக்கொள்வோம்!

Victory King (VK)

No comments: