Sunday, January 15, 2023

#Victory King: எழுதப் படாத உயில்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1182

ஒரு குடும்பத்தில் ஆண் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் சகோதரிகளுக்கு சீர் என்ற பெயரில் பொங்கல் திருநாளுக்கு பொருள்களோ அல்லது பணமோ கொடுப்பதைஒரு சம்பிரதாயமாக முற்காலத்தில் இருந்து செய்து வருவது அந்த குடும்பத்தின் உறவு செங்கலியை வலுப்படுத்துவதற்காகத்தான். ஆண் பிள்ளைகள் இல்லாத வீட்டில் பெற்றோர்களே இதை செய்து வருவார்கள். இது போன்ற பாசத்தோடு பிணைந்த வழக்கங்கள் எழுதப்படாத ஒரு உயில் தான். இது ஒரு உதாரணம் தான். இன்றைய இளைய தலைமுறைகள் உணரட்டுமே!

Victory king alias V. Krishnamurthy

No comments: